ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சிங்கபெருமாள்கோவில்-செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.32, 10.08 மற்றும் 10.56 மணிக்கு செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில்கள் இன்று 12, 13ம் தேதிகளில் சிங்கபெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் செங்கல்பட்டிலிருந்து காலை 11.30, பிற்பகல் 12.20 மற்றும் பிற்பகல் 1 மணிக்கு கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் இன்று மற்றும் 12, 13 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு - சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்கள் இடையே ரத்து செய்யப்பட்டு, சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். திருமால்பூரிலிருந்து காலை 10.40 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில் இன்று மற்றும் 12, 13ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட ரயிலுக்கு பதிலாக திருமால்பூர் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

Related Stories: