தென்காசி, ஏப்.10: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் தென்காசியில் நகர திமுக, மாவட்ட மருத்துவரணி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார். நகர செயலாளர் சாதிர் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மாரிமுத்து, விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் கோமதிநாயகம், வழக்கறிஞரணி அமைப்பாளர் வேலுச்சாமி, நகர நிர்வாகிகள் நடராஜன், சேக்பரீத், பால்ராஜ், கலை பால்துரை, மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், ராமராஜ், மோகன்ராஜ், தங்கபாண்டி, ஜமாலுதீன் பாபு, முகமமதலி, அஷ்ரப்அலி, சுப்பையா, முகைதீன்பிச்சை, அழகிரி, தேவதாஸ், குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். பார்வர்ட் பிளாக் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், மதிமுக நகர செயலாளர் ஆறுமுகசாமி, திமுக ஒன்றிய செயலாளர் லாலா சங்கரபாண்டியன், சோமசெல்வ பாண்டியன், கண்ணன், மாரிமுத்து, பொறியாளரணி அமைப்பாளர் சங்கர், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புனிதா அஜய்மகேஷ்குமார், முன்னாள் பஞ்.தலைவர் ராசா என்ற ராசையா, சங்கை சரவணன், தொமுச மைக்கேல் நெல்சன், இளைஞரணி சரவணன், ஆதிதிராவிடர் அணி யோசேப்பு, தொண்டரணி காளிசாமி, மகளிரணி அண்ணாமலை, சுப்புத்தாய், ராமு பங்கேற்றனர்.