மதுரை, ஏப். 10: பொன்னமராவதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய வழக்கில் ெகாரோனா கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு மீண்டும் மனு செய்யலாம் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சேர்ந்த அழகப்பன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பொன்னமராவதி தாலுகா ஆலவயல் கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோயிலில் பங்குனி மாதம் பழத்திருவிழா கடந்த 200 ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா ஏப்.9ல்(நேற்று) நடக்கும். அப்போது மதியம் ஜல்லிக்கட்டு விழா நடத்துவது வழக்கம்.