சென்னை, ஏப்.9: கொளத்தூர் எல்லையம்மன் கோயில் தெருவில், ராஜமங்கலம் சீனிவாசா நகரை சேர்ந்த சந்திர ராஜா (55), கார் டிங்கரிங் மற்றும் பெயின்டிங் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணி அளவில் இவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. தகவவலறிந்து வில்லிவாக்கம், திருவிக நகர், செம்பியம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.