தேன்கனிக்கோட்டை, ஏப்.3: தேன்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திப்பசந்திரம் கிராமத்தில், முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. தற்போது கோடையின் தாக்கத்தால் கிராமத்தில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.