உடன்குடியில் சரத்குமார் பிரசாரம்

உடன்குடி, ஏப்.2:  பணம் கொடுத்து வெற்றிபெறுவோர் தொடர்ந்து மக்கள் பணி செய்யமாட்டார்கள் என உடன்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சமக தலைவர் சரத்குமார் பேசினார். திருச்செந்தூர் தொகுதி சமக வேட்பாளர் ஜெயந்தியை ஆதரித்து உடன்குடி மெயின் பஜாரில் அவர் பேசுகையில் ‘‘மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக நான் மற்றும் கமல், ஐஜேகே ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். தற்போது ஓட்டுக்கு ரூ.1000, ரூ.2000 என கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் சேவை செய்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதநிலை உருவாகி வருகிறது. பணம் கொடுத்து வெற்றி பெறுபவர்கள் வெற்றி பெற்றவுடன் மக்கள் சேவை செய்ய மாட்டார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படவும், திருச்செந்தூர் தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்பட்டு வேலைவாய்ப்புகள் பெருகிடவும் சிறந்த கல்வியாளரான ஜெயந்தியை தேர்ந்தெடுங்கள்’’ என்றார். பிரசாரத்தில் தெற்கு மாவட்டச் செயலாளர் தயாளன், மாணவர் அணி  மாவட்டச் செயலாளர் சித்திரைவேல், இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் சமத்துவ சுதாகர், ஒன்றியச் செயலாளர் அழகேசன், நகரச் செயலாளர் முத்து, மகளிர் அணி ஒன்றியச் செயலாளர் பொன்மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: