தர்மபுரி, ஏப்.2: தர்மபுரி மாவட்டத்தில் மிக பற்றமான 204 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில், 1817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 420 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இதர வகையில் கண்காணிக்கப்பட வேண்டிய வாக்குச்சாவடிகளின் பட்டியலும் எடுக்கப்பட்டது. இதனையடுத்து மிக பதற்றமான 204 வாக்குச்சாவடிகளில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த கேமராவில் பதிவுகளை ஆன்-லைன் மூலமாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.