தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி நேற்று திருநீர்மலை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘அதிமுக ஆட்சியில் சாலை, மழைநீர் கால்வாய் வசதிகள் செய்யப்படாததால், கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட மழை மற்றும் புயல் காலங்களில் தெருக்கள் மற்றும் குடியிருப்பு வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து நான் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சூழ்ந்திருந்த மழை நீரை வெளியேற்றி, சாலைகளை சீரமைத்தேன். கொரோனா காலத்தில் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரமுடியாத சூழ்நிலையில், நான் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்தேன். எனது சொந்த செலவில், லாரிகள் மூலம் ஒவ்வொரு தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தினேன்.