திருவொற்றியூர்: மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாதவரம் வி.மூர்த்தி, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, மாதவரம் கண்ணபிரான் கோயில் தெரு, உடையார் தோட்டம், தபால் பெட்டி, கே.கே.ஆர் கார்டன், சூரப்பட்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மாதவரம் வி.மூர்த்தி மக்கள் மத்தியில் பேசுகையில், ‘இந்த பகுதியில் தரமான சாலை, சிறுவர் பூங்கா, தெருவிளக்குகள், உடற்பயிற்சி கூடம் போன்ற அடிப்படை வசதிகளை அதிமுக அரசு செய்து கொடுத்துள்ளது.