விருதுநகர்,மார்ச் 26: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் தொகுதியில் 14 ஆண் வேட்பாளர்களும், திருவில்லிபுத்தூர்(தனி) தொகுதியில் 15 வேட்பாளர்களும், சாத்தூர் தொகுதியில் 27 வேட்பாளர்களும், சிவகாசி தொகுதியில் 26 வேட்பாளர்களும், விருதுநகர் தொகுதியில் 18 ஆண் வேட்பாளர்களும், அருப்புக்கோட்டை தொகுதியில் 29 வேட்பாளர்களும், திருச்சுழி தொகுதியில் 20 வேட்பாளர்களும் என 149 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டதால் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1,881ல் இருந்து 2,370 ஆக அதிகரித்து விட்டது. ராஜபாளையம் 340 வாக்குச்சாவடிகள், திருவில்லிபுத்தூர் 357, சாத்தூர் 351, சிவகாசி 368 , விருதுநகர் 325, அருப்புக்கோட்டை 311, திருச்சுழி 318 என 2370 வாக்குச்சாவடிகள் உள்ளன.