பொன்னமராவதி,மார்ச்24: பொன்னமராவதி வடக்கு ஒன்றியப்பகுதியில் இரண்டாவது நாளாக நேற்று திருமயம் தொகுதி திமுக வேட்பாளர; ரகுபதி வாக்கு கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார;.திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி பொன்னமராவதி வடக்கு ஒன்றியப்பகுதியில் உள்ள ஆத்தங்காட்டில் தொடங்கி திருநாட்டாம்பட்டி, வாழைக்குறிச்சி, கோவனூர், சுந்தரம்,செம்பூதி, காரையூர், வௌ்ளகுடி, அரசமலை உள்ளிட்ட 25இடங்களில் வாக்குகள் கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை திமுக ஆட்சி அமைந்தவுடன்அனைவருக்கும் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் காரையூர் காவல்நிலையம் இலுப்பூர் உட்கோட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை மீண்டும் பொன்னமராவதிக்கு கொண்டவரப்படும்.