திருவொற்றியூர்: மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் 5வது பிரதான சாலையை சேர்ந்தவர் ரவி (52). சவுகார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (47). இவர்களது மகன் உமேஷ், புனேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக இருந்த கலைவாணி செய்யப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து, மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் கலைவாணியின் வீட்டு காவலாளியாக வேலை செய்து வந்த ராகேஷ் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கர்நாடக மாநிலத்துக்கு தப்பிய ராகேஷ் (31), அவரது மனைவி ரேவதி (25) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கலைவாணி வீட்டில் ராகேஷ் மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகியோர் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.