அரியலூர், மார்ச் 23: அரியலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும், ஒவ்வொரு கிராமத்திலும் செய்த பணிகள் குறித்து கூறி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அரசு தலைமை கொறடாவும், மாவட்ட செயலாளரும், அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான தாமரை ராஜேந்திரன் நேற்று காலை திருமழப்பாடி காந்திநகரில் துவங்கி புதுக்கோட்டை, பாக்கியநாதபுரம், மணல்மேடு, கண்டிராதித்தம், க.மேட்டுத்தெரு, இலந்தக்கூடம், வைத்தியநாதபுரம், குலமாணிக்கம், செம்பியக்குடி விளாகம், கோவில் எசனை, சன்னாவூர், பளிங்காந்த்தம் உட்பட பல்வேறு ஊர்களில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி கூறியும், அப்பகுதியில் செய்த சாலைப்பணிகள், ஏரி, வரத்து வாய்க்கால் தூர்வாரியது, கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை கூறி வாக்கு சேகரித்தார்.