நாகை, மார்ச் 21: நாகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 13 வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டது. நாகை சட்டமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த 12ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. 19ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இதில் 19 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை, நாகை ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரி மணிவேலன் தலைமையில் நாகை சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பட்டேல், காவல் பார்வையாளர் லுபெங்கைலன் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.