மயிலாடுதுறை, மார்ச் 20: மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையத்தை தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன்பிநாயர், எஸ்பி நாதா ஆய்வு செய்தனர். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் உள்கட்டமைப்பு வசதி, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், நாகை கலெக்டருமான பிரவீன்பிநாயர் கூறுகையில், ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். ஒவ்வொரு வேட்பாளரின் சார்பில் ஒரு முகவர் பாதுகாப்பு அறையை கண்காணிக்க அனுமதிக்கப்படுவர்.