கமுதி, மார்ச் 20: கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி தங்களது விரதத்தை துவங்கினர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 16 நாட்கள் நடைபெறும் விழாவில் வரும் 30ம் தேதி கோவிலின் முன்பு ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு காணிக்கை செலுத்துவர். அன்று நள்ளிரவு கோவிலின் உள் மற்றும் வெளி பகுதிகளில் பக்தர்கள் உருண்டு கொடுத்தும், கோவிலை சுற்றி வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். பின்னர் 31ம் தேதி ஏராளமானோர் உடல் முழுவதும் சேறுபூசி கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.