சீர்காழி, மார்ச் 20: சீர்காழி நகருக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் வாக்குறுதியளித்தார். சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார் அப்போது வேட்பாளர் பன்னீர்செல்வத்திடம் சீர்காழி நகரில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் பல்வேறு இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.