மதுரை, மார்ச் 20: மதுரை கிழக்கு ெதாகுதியில் திமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ போட்டியிடுகிறார். கொளுத்தும் ெவயிலையும் பொருட்படுத்தாமல் ஒத்தக்கடை உள்ளிட்ட 30 கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த காலத்தில் ஆளும் கட்சியினர் ஓடி ஒளிந்த நேரத்தில் கூட 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக அரிசி வழங்கினோம். நிவாரண பொருட்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி மக்களிடம் தொடர்பில் இருந்தோம். ஆனால், என்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்பியாக இருந்த போதும் சரி, தற்போதும் சரி கடந்த 10 ஆண்டுகளாக மக்களை சந்தித்ததே கிடையாது.