ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மூவரசன்பட்டு போன்ற பகுதியில் உள்ள நலச்சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நான் கடந்த கடந்த 5 ஆண்டுகளாக உங்களில் ஒருவனாக இருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். பழவந்தாங்கலில் ₹80 லட்சத்தில் நூலக கட்டிடம், தில்லைகங்கா நகரில் ₹48 லட்சத்தில் உள்வட்ட சாலையில் கல்வெட்டு, ஆலந்தூர் முழுதும் 4000 புதிய எல்இடி விளக்குகள், இரண்டாம் கட்டளை இருளர் காலனியில் பழுதடைந்த 14 வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டி கொடுத்துள்ளேன். நந்தம்பாக்கம் ஜடிபிஎல் காலனியில் சாலை, பரங்கிமலை சுரங்கப்பாதை அருகில் உள்ள சாலையை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் கைப்பற்றயபோது அந்த றுவனத்திடமிருந்து போராடி மீட்டு தந்தேன், பத்திரப்பதிவு அலுவலத்தை கிண்டிக்கு மாற்றும் திட்டத்தை தடுத்து நிறுத்தியது, வட்டாட்சியர் அலுவலகம் அருகிலேயே பத்திர பதிவு அலுவலகம் அமைக்க 10 சென்ட் நிலம் பெற்றுத்தந்தது.