இன்றிரவு இறுதிசுற்று: பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?

காமன்வெல்த் போட்டியில் 8வது நாளான நேற்று ஆடவர் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 79.61 மீட்டர் எறிந்து எளிதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவருடன் ரோஹித் யாதவ் (78.37 மீ), யஷ் வீர் சிங் (78.36 மீ) ஆகியோரும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்தனர். இன்று நள்ளிரவு 12.45 மணிக்கு இறுதிச்சுற்று நடக்கிறது. இதில் நீரஜ் பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவருக்கு இலங்கை,பாகிஸ்தான் வீரர்கள் கடும் சவால் அளிப்பர்.

ஆடவர் டெக்கத்லானில் காயம் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் தேஜஸ்வின் சங்கர் 100 மீட்டர், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகளின் முடிவில் பதக்கப் போட்டியில் நீடிக்கிறார். ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) தகுதி சுற்றில் தமிழக வீரர்கள் சித்ரவேல்(16.41மீட்டர்), செல்வபிரபு சித்ரவேல்( 16.26 மீட்டர்) ஆகியோர் முறையே 2 மற்றும் 3வது இடம்பிடித்து இறுதிசுற்றுக்கு தகுதிபெற்றனர்.

நாளை இறுதிச்சுற்று நடைபெற உள்ளது.குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 10 வெண்கல பதக்கங்கள் உறுதியான நிலையில் இன்று அரையிறுதி நடக்கிறது. இதில் வெண்கலத்தை வெள்ளியாக உறுதிசெய்யப்போவது யார், யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Related Stories: