×

வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

 

சிவகாசி, ஜூலை 20: திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியில் எஸ்ஐ முத்துமாரியப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (35) என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகளை தயாரித்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அங்கிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Tags : Sivakasi ,SI Muthumariappan ,Alavurani ,Tiruthangal ,Tamilselvan ,
× RELATED திமுக ஆட்சி சாதனைகள் விளக்கி...