லண்டன்: இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் எடுத்துள்ளது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 360 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா 138 ரன்களும், சுப்மன் கில் 77 ரன்களும், விராட் கோலி 74 ரன்களில் வெளியேறினர். இங்கிலாந்து அணி சார்பாக சாம் கர்ரன் 4 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், ஜேக்கப் பெத்தல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
