டூவீலர் மீது வேன் மோதி 2 பேர் பலி உசிலம்பட்டி அருகே பரிதாபம்
உசிலம்பட்டி, மார்ச் 15: உசிலம்பட்டி அருகே, டூவீலர் மீது வேன் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாயினர். உசிலம்பட்டி அருகே, மேலவெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா மகன் அபிஷேக் (19), கீழ வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னையா மகன் ராஜ்குமார் (35). இவர்கள் இருவரும் ஒரே டூவீலரில் உசிலம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் சென்று கொண்டிருந்தனர். நடுப்பட்டி காலனி அருகே எதிரே வந்த வேன் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் அபிஷேக், ராஜ்குமார் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். உத்தப்பநாயக்கனூர் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்