பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் கோரிக்கை ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர், ஜூலை 10: ஓன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தை வி.பி ராம்ஜி என பெயர் மாற்றம் செய்துள்ள ஓன்றிய அரசை கண்டித்தும், மீண்டும் மாகத்மா காந்தி பெயரையே சுட்ட வேண்டும், இந்த வேலை வாய்ப்பு உறுதி சட்டத்ததை 200 நாட்களாக உயர்த்தி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

Related Stories: