நெல்லை, ஜூலை 10: தூத்துக்குடி தாளமுத்துநகர், சுடலையார்புரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மனைவி ராஜம் (44). இவர், கன்னியாகுமரியில் தச்சு வேலை செய்து வரும் தனது மகன் செல்வகணேஷ் (20) பணியின் போது காயமடைந்ததால் வைத்தியரிடம் கட்டு போடுவதற்காக மகனுடன் மாதாநகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அழகேசபுரம் பகுதியைச் சார்ந்த பாண்டி மாரிவிஜய் (23), தஸ்நேவிஸ் நகர் பத்மநாபன் மகன் பிரகாஷ் (21) மற்றும் 4 இளம்சிறார் ஆகியோர் முன்விரோதம் காரணமாக செல்வகணேசை அவதூறாக பேசி அரிவாள்,வாள் ஆகியவற்றை எடுத்து வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளனர்.இதையடுத்து சுதாரித்துக் கொண்ட செல்வகணேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
