சென்னை: சென்னை சிபிசிஐடி டிஐஜியாக இருந்த வருண்குமார் ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஐஜியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி விக்ரமன் சென்னை சிபிசிஐடி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி ரகுபதி பள்ளிக்கரணை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
