குளத்தூர், மார்ச் 12: குளத்தூர் அருகே வெவ்வேறு இடங்களில் வியாபாரி உள்பட இருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். குளத்தூர் அருகே தருவைகுளம் அடுத்த மேலமருதூரைச் சேர்ந்தவர் பொய்யாழி (30). கொய்யாபழ வியாபாரி. இவரது மனைவி மாரிச்செல்வி. தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவருடன் பேசுவதை மாரிச்செல்வி தவிர்த்துவிட்டாராம். இதனால் விரக்தியடைந்த டைந்த பொய்யாழி, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த தருவைகுளம் போலீசார் பொய்யாழி உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.