டோல்கேட்டில் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய LPG டேங்கர் லாரி

உத்தரப்பிரதேசம்: உத்தரபிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்த LPG டேங்கர் லாரி சுங்கச்சாவடியில் மோதி விபத்துக்குள்ளானது. தீயில் சிக்கி சுங்கச்சாவடி ஊழியர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கொஷம்பி பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த LPG டேங்கர் லாரி ஒன்று அங்கிருந்த சுங்கச்சாவடியில் மோதி விபத்துக்குள்ளானது. மோதியதில் டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்துத் தீப்பிடித்தது. இந்த விபத்தின் போது ஏற்பட்ட தீப்பிழம்புகளும் கரும்புகையும் சுங்கச்சாவடியிலிருந்து பல கிலோமீட்டர் தூரத்திற்கு கொழுந்துவிட்டு எரிவதை பார்க்க முடிந்தது என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த LPG டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில், சுங்கச்சாவடியில் பணியாற்றிக் கொண்டிருந்த 6 ஊழியர்கள் பலத்த தீக்காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், விபத்து ஏற்படுவதை உணர்ந்த லாரியின் ஓட்டுநரும் நடத்துநரும் வாகனத்திலிருந்து கீழே குதித்துத் தங்களது உயிரைத் தற்காத்துக் கொண்டனர்.

Related Stories: