மகாராஷ்டிராவில் நாய் கடி தடுப்பூசி செலுத்திய சில நிமிடங்களிலேயே 17 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயங்கி கீழே விழுந்த போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தடுப்பூசியின் பக்கவிளைவா அல்லது தலையில் ஏற்பட்ட காயத்தால் மரணம் நிகழ்ந்ததா என்பது குறித்த துல்லியமான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
