திருப்பூர்: தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். மாநகராட்சியின் நேரடி ஊழியர்களாக தூய்மைப் பணியாளர்களை அங்கீகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
