சென்னை: சென்னை பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை 11 கிடங்குகளில் உள்ள கழிவுகளை அகற்ற கோரிய வழக்கு தொடரப்பட்டது. நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக விசாரணை நடத்தி வருகிறது. 96 லட்சம் டன் கழிவுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
