திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரெங்கப்பநாயக்கன்பட்டியில் பள்ளி, கோயில் அருகே டாஸ்மாக் கடை உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. சாலையோரம் மதுக்கடை உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
