வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

கறம்பக்குடி, மார்ச் 8: கறம்பக்குடியில் நேற்று வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள கறம்பக்குடியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையினர் சார்பில் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தாசில்தார் விஸ்வநாதன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். தாலுகா அலுவலகத்தில் இருந்து துவங்கி சீனிக்கடை முக்கம், உள்கடை வீதி, பேருந்து நிலையம், புதுக்கோட்டை சாலை வழியாக மீண்டும் தாலுகா அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் கறம்பக்குடி தாலுகா துணை தாசில்தார் ராமசாமி, வருவாய் ஆய்வாளர்கள் ஸ்டெல்லா, புவனேஸ்வரி மற்றும் வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: