கலெக்டர் தகவல் என்எஸ்எஸ் முகாம்

காரைக்கால், மார்ச் 8: காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், பூவம் கிராமத்தில் துவங்கியது. மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லஷ்மணபதி தலைமை வகித்து பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கை எட்டுவதற்கு ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் வீடு வீடாக சென்று மக்களை அணுகி வாக்களிக்க அறிவுறுத்த வேண்டும். பொதுமக்களிடம் வாக்களிக்க வரும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிந்து வர வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தாமோதரன், உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: