சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். பயிர்க்கடன் தொடர்பான முதல்வர் விஜய்யின் அறிவிப்பு தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணானது. விவசாயிகள் போராட்டத்துக்கு பின்னர் தள்ளுபடி வரம்பை உயர்த்துவது விவசாயிகளை ஏமாற்றுவதாகும். மாற்றம் கொண்டு வருவதாக முதலமைச்சர் விஜய் சொன்ன வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
