சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடியில் தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் பாரபட்சம் காட்டுவது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
