கோவை: சுங்கம் அரசுப் பேருந்து பணிமனை முன்பு தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனர். பேருந்து பிரேக் டவுன் ஆனால் ஊதியத்தில் அதற்கான தொகை பிடித்தம் செய்யப்படுவதாகவும், பல ஆண்டுகளாக பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
