சென்னை: தெருநாய்களுடன் மக்களை ஒப்பிட்டு பேசும் அளவுக்கு மனம் இல்லாதவன் நான் இல்லை என்று ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். நான் எப்போதும் எனது ரசிகர்களையும் பொதுமக்களையும் தாய்க்கு நிகராக மதித்து வந்துள்ளேன். அவர்களை நான் ஆழமாக மதிக்கிறேன். ஒரு புதிய சூழலுக்குப் பழகிக்கொள்ள நேரம் எடுக்கும் என்பதைப் பற்றி மட்டுமே நான் பேசினேன், எங்கும் மக்களைக் குறிப்பிடவில்லை.
