கொரோனா வராமல் தடுக்க சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு தடுப்பூசி

சீர்காழி, மார்ச் 5: சீர்காழி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று வராமல் இருக்க அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சென்று பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் தலைமையில் அனைத்து நிலை அலுவலர்களும் அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.

Related Stories: