விருதுநகர்: சாத்தூர் அருகே செவல்பட்டியில் பலத்த சூறைக்காற்றால் 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. பலத்த சூறைக்காற்று வீசியதால் 40க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை, செவல்பட்டி, சிப்பிப்பாறை, மைப்பாறை பகுதியில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து சாலையில் கிடப்பதால் போக்குவரத்து, மின்விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது.
