இதுவரை 4.6 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: udanpirapinkural.in மூலம் இதுவரை 4.6 லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எவ்வித தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தொண்டர்கள் பதிவு செய்ய வேண்டும். மே 31க்குள் உங்கள் கருத்துகளை udanpirapinkural.in-ல் பதிவு செய்ய வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வரின் சமூக வலைதள பதிவில்;
udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.

இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை //udanpirapinkural.in இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.

கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: