பாலக்காடு, மே 8: பாலக்காடு மாவட்டத்தில் மாம்பழம் சீசன் துவங்கிய நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாம்பழ குடோன்களிலும், கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாம்பழங்கள் பழுக்கவைக்க ரசாயன கலவைகள் பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக ஆய்வு செய்தனர். பாலக்காடு மாவட்டத்தில் கொல்லங்கோடு, முதலை மடை, பள்ளம் ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ குடோன்கள், மாம்பழச்சாறுகள் தயாரிக்க கூடிய ஆலைகளிலும் ஆய்வு நடத்தினர். அப்போது உணவு பாதுகாப்புத்துறை விதிமுறைகளை மீறி செயல்பட்ட குடோன் உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்திய மூன்று நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டன.
