டெல்லி: தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் NDA-வை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றத்தையும், மக்களின் நலனையும் முன்னெடுத்துச் செல்வதில் ஒன்றிய அரசு தனது அனைத்து முயற்சிகளையும் முழுமையாக மேற்கொள்ளும் என இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமரின் சமூக வலைதள பதிவில்:
தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் NDA-வை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றிகள். மக்களின் பிரச்சினைகளைக் களைவதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
சிறப்பான தேர்தல் செயல்பாட்டை வெளிப்படுத்திய TVK-விற்கு எங்களது வாழ்த்துகள்.
தமிழகத்தின் முன்னேற்றத்தையும், மக்களின் நலனையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு தனது அனைத்து முயற்சிகளையும் முழுமையாக மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.
