×

இளைஞர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவார்கள்: பிரதமர் மோடி சமூக வலைத்தள பதிவு

சென்னை: இளைஞர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாக்களித்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. மக்கள் அனைவரும் ஓட்டுச்சாவடிகளில் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இதனால், எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு வாக்கு சதவீதம் என்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில், முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே (95) சென்னையில் ஓட்டளித்தார். 1946 முதல் நேரில் நான் ஓட்டளித்து வருகிறேன்.

ஓட்டளிப்பது என்பது வெறும் உரிமை மட்டுமல்ல; எதிர்காலத்தின் மீதான ஒரு பொறுப்புமாகும். உங்கள் ஒவ்வொரு முக்கியமானது. வெளியே வாருங்கள். துணிந்து நில்லுங்கள் என சமூக வலைதளத்தில் எச்.வி.ஹண்டே பதிவிட்டிருந்தார் எச்.வி.ஹண்டே ஓட்டளித்த பதிவை பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி மோடி தனது பதிவில், ‘‘மிக முக்கியமான ஒரு செய்தி. இளைஞர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாக்களித்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : PM Modi ,Chennai ,Modi ,Tamil Nadu Assembly elections ,
× RELATED இன்றைய காலத்தின் அவசியம் சத்குரு:...