சென்னை: தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூர், ஈரோட்டில் தலா 104, திருப்பூர் தருமபுரி, மதுரை விமான நிலையத்தில் தலா 102, திருச்சி, நாமக்கல்லில் தலா 102, கோவை மதுரை நகரத்தில் தலா 101, பாளையங்கோட்டை, சேலத்தில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
