பேராவூரணி, பிப்.21: பள்ளி மாணவர்கள் நலன் கருதி ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்க தலைவர் தர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு மேல்நிலை வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. அதன்படி மே.3 முதல் 21ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நோய்த்தொற்று காரணமாக குறைந்திருந்த மாணவர்கள் வருகை தற்போதுதான் சீரடைந்து வருகிறது. 40 சதவீதம் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டிருந்தாலும், பாடப் பகுதிகளை முழுமையாக நடத்தி முடிப்பதற்கு கிட்டத்தட்ட ஏப்ரல் மாதம் கடைசி வரை ஆகும். இதனிடையே செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.