×

தேர்தல் முடிந்தவுடன் பாஜவுக்கு டாடாவா? எடப்பாடி பரபரப்பு பேச்சு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை அவுரித்திடலில் பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது: ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதன் பொருள் அவர்களின் அனைத்து கருத்துக்களையும் ஏற்பதாகாது. கூட்டணி என்பது தேர்தல் காலத்திற்கு மட்டுமே, ஆனால் கொள்கை என்பது நிலையானது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வகுத்துத் தந்த கொள்கைகளையே அதிமுக பின்பற்றும்.

யாரும் பயப்படத் தேவையில்லை. தமிழகத்தில் என்டிஏ கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்குகிறது. நாங்கள் கூட்டணியைத் தெளிவுபடுத்தி உள்ளோம். இங்கு என்டிஏவை அதிமுகதான் வழிநடத்துகிறது. அதிமுகவே ஆட்சி அமைக்கும். நானே முதலமைச்சராக அறிவிக்கப்படுவேன். இதில் டெல்லி எங்கே வருகிறது? கட்சிகள் அடிக்கடி கூட்டணிகளை மாற்றிக் கொள்வது இயல்புதான். அதிமுக அரசு மட்டுமே சிறுபான்மையினரைப் பாதுகாக்கும். அதுவே எங்களின் நிலையான கொள்கையாகும்.

 

Tags : Tata ,BJP ,Edappadi ,Nagapattinam ,Aurithital ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED கின்னஸ் சாதனை படைத்த பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பால் காலமானார்