சேலத்தில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு

சேலம், பிப்.19: சேலம் மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,620 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 32,098 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 466 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து 56 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: