கிருஷ்ணகிரி, பிப்.19 :கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினையொட்டி போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி சக்திவேல், டிஎஸ்பி சரவணன், பயிற்சி டிஎஸ்பி ஹரிசங்கரி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கிருஷ்ணகிரி வெங்கடேசன், ஓசூர் ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில், 108 ஆம்புலன்சில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம் மற்றும் அன்புச்செழியன், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் ராமன், டைட்டஸ் உள்பட 500க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.