ஊருக்குள் புகுந்த புள்ளி மான் மீட்பு

ஓசூர், பிப்.19:  ஓசூர் அருகே உள்ள மத்திகிரி கால்நடை பண்ணையையொட்டி, அந்திவாடி ஏரிப்பகுதி, பட்டு வளர்ச்சி அலுவலகம், ராமநாயக்கன் ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில், கால்நடை பண்ணையிலிருந்து வெளியேறிய 6 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான், தண்ணீர் தேடி அப்பாவு நகருக்குள் புகுந்தது. பின்னர், நேரு நகரில் சுற்றி வந்தது. அனை அப்பகுதி மக்கள் மீட்டு விஏஓ நட்ராஜூக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், வனத்துறையினர் விரைந்து சென்று மானை மீட்டு, வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Related Stories: